Wednesday, June 4, 2008

விஜய் நடிக்கும் வில்லு


விஜய் நடிக்கும் வில்லு பட ஷூட்டிங்கில் ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மீது தனியார் பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், பலரது மண்டை உடைந்தகது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய், நயனதாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.
நெய்காரபட்டியில் உள்ள ஜமீன் பங்களாவில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் பழனியில் ஷூட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் அருகில் உள்ள பகுதிகளுக்கு காட்டுத் தீயாக பரவியது. இதனால் அருகில் உள்ள கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
மேலும் பள்ளி சென்று வீடு திரும்பிய கிராம குழந்தைகளும், ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஷூட்டிங்கிற்காக அழைத்து வரப்பட்ட தனியார் செக்யூரிட்டி அமைப்பினர் விஜய் ரசிகர்கள் மீதும், கிராம மக்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர்களில் பலருக்கு மண்டை உடைந்தது. பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். படக் குழுவினர் மீது கிராம மக்கள் ஆத்திரத்துடன் இருப்பதால் படக்குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் படத்தின் பெயர் மாற்றப்படுகிறது.புதிய படம் ''வில்லு''
விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வில்லு என மாற்றப்பட்டுள்ளது.விஜய், பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர். இருவரும் முன்பு இணைந்து கொடுத்த படம் போக்கிரி. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் 2வது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயனதாரா. கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் ஆடிய நயனதாரா, முதல் முறையாக விஜய்யுடன் தனி நாயகியாக நடிக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்பெயரை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால், அதை மாற்றி வில் என புதுப் பெயர் சூட்டினர்.ஆனால் இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கம் பிளஸ் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதனால் விஜய் படப் பெயர் மாறுமா, மாறாதா என்ற குழப்பம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று முதல் விஜய், பிரபுதேவாவின் புதுப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் பெயரை வில் என்பதற்குப் பதில் வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார்.



விஜயின் புதிய படத்தின் பெயர் வில்லு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸில் வில்லு, ஜூன் 6 ஆம் தேதியுடன் தனது பயணத்தை தொடங்குகிறதாம்.விஜயின் ஜோடி நயன்தாரா என்பது ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை தேவிஸ்ரீ பிரசாத் என்பதும் ஏற்கனவே முடிவான விஷயம்.'வில்லு'வில் இரண்டு வில்லாதி வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரகாஷ்ராஜ். இன்னொருவர் பிஜுமேனன். ஏற்கனவே தமிழ்ப் படங்களில் பிஜுமேனன் நடித்திருந்தாலும் அரசாங்கம் படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வருகிறதாம். முதல் வாய்ப்பு வில்லு!போக்கிரியைத் தொடர்ந்து வில்லுவையும் வெற்றிபெற வைப்பார் பிரபுதேவா என்ற நம்பிக்கை விஜய்க்கு. நமக்கும் அதே நம்பிக்கைதான்

No comments: