Wednesday, June 18, 2008

காரைக்குடியில் விஜய்



விஜய் நடிக்கும் 'வில்லு' படத்தை ராக்கெட் வேகத்தில் எடுத்து வருகிறார் பிரபுதேவா. விஜய், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'வில்லு' படத்தை தொடக்கவிழா கூட நடத்தாமல், பொள்ளாச்சியில் சின்ன பூஜையுடன் தொடங்கினார் பிரபுதேவா. பொள்ளாச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விஜய்-நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன.
பிறகு பழனியில் சில காட்சிகளை எடுத்தார் பிரபுதேவா. நான்-ஸ்டாப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தால் பிரபுதேவா, விஜய் உள்ளிட்ட 'வில்லு' டீம் தசாவதாரத்தை பழனி திரையரங்கிலேயே பார்த்தனர்.

அடுத்து விஜய் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக வில்லு யூனிட் காரைக்குடி சென்றுள்ளது. காட்சிகளை ரவிவர்மன் படமாக்கி வருகிறார்.
'வில்லு' இந்தி 'சோல்ஜரின்' ரீ-மேக் என்று செயதி வெளியானது. இது குறித்து பிரபுதேவா, விஜய் இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோன்று 'வில்லு' பட ஸ்டில்கள் வெளியே போகமலிருக்கவும் ஏக கெடுபிடிகள்.
தேவையின்றி எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறார்களா?

No comments: