விஜய், நயன்தாரா முதன் முதலாக இணையும் 'வில்லு' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறதுஇந்தி 'சோல்ஜர்' படத்தின் ரீ-மேக் இது என்று பரவலான பேச்சு.
அதற்கு முன்பு ஒரேயொரு நாள் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. நடனப் பெண்களின் நடுவில் விஜய் மான் கொம்புடன் ஆடுவதை ஒருநாள் முழுதும் ஷூட் செய்தார் பிரபுதேவா. இந்த போட்டோசெஷனில் நயன்தாரா மிஸ்ஸிங்.
'வில்லு'வின் சில காட்சிகள் பழனியில் எடுக்கப்பட உள்ளன. இதனால் பத்து நாட்கள் விஜய்யும், நயன்தாராவும் பழனியில் தங்க உள்ளனர். பொள்ளாச்சியிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரபுதேவாவின் வேகத்தைப் பார்த்த யூனிட் ஆட்கள், தீபாவளிக்கு முன்பே 'வில்லு' திரைக்கு வரும் என்கிறார்கள்
No comments:
Post a Comment