Friday, May 30, 2008

சிங்கம் படத்திற்க்கு பிரபுதேவாவும், விஜயும் தயார்


இன்னும் சில வாரங்களில் பிரபுதேவாவும், விஜயும் சிங்கத்திற்காக தன்னை தயார் செய்ய துவங்கி விடுவார். (சிங்கம் இப்போ ஹரி கஸ்டடியில் இருக்குதாமே?) பிரபுதேவாவும், விஜயும் இணைந்து உட்கார்ந்து டைட்டில் விஷயத்தை முடிவு செய்வார்களாம். இந்த முறை எவ்வித தடுமாற்றமும் ஆகிவிட கூடாது என்பதால், வடிவேலுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இறங்க முடிவு செய்துவிட்டார் விஜய். எப்பவுமே இப்படி டிமாண்ட் வந்தால் கேட்ட சம்பளத்தை கொடுத்துதானே ஆக வேண்டும்? வடிவேலுவின் கைகளில் இரண்டு கோடி வந்ததாக தகவல். உண்மையாக இருந்தால், வடிவேலுவின் வேட்டையில் இது சரியான திமிங்கலம்தான்!

Thursday, May 29, 2008

Wednesday, May 28, 2008

birthday of vijay 22/06/2008

This month June 22nd anniversary date of Tamil superstar Vijay ilayathalapathy Vijay. So if you want to send birthday cards or to congratulate him. Send this e-mail address by p_kanojan@hotmail.com and fansvijay@hotmail.com. Send the Advent 20/06/2008 thank you
இம்மாதம் (ஜீன்) 22ம் திகதி ஜீன் மாதம் next superstar "இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு நீங்களும் வாழ்த்த விரும்புகிரீர்களா? பிறந்தநாள் வாழ்த்து மடல்கள், வாழ்த்துக்கள் தெரிவிக்க அல்லது அனுப்ப விரும்பிகிரீர்களா? fansvijay@hotmail.com and p_kanojan@hotmail.com இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள், 20/06/2008 க்கு முன் அனுப்பிவையுங்கள் நன்றி

Sunday, May 25, 2008

விஜய் ஜோடி நயன்தாரா

விஜய்யின் புதிய படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விரைவில் தொடங்குகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் சுமார் என்பதால் உஷாராக ரீ-மேக் படத்தை தேர்வு செய்துள்ளார் விஜய்.இந்தியில் அமிதாப் நடித்த 'சோல்ஜா' படத்தின் ரீ-மேக் தமிழுக்கு ஏற்ற காரம் மசாலாவுடன் தயாராகியிருக்கிறது. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்துள்ளனர்.'தசாவதாரம்' படத்தின் ஒளிப்பதிவாளரும் 'மாஸ்கோவின் காவிரி' படத்தின் இயக்குனருமான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பது தேவிஸ்ரீபிரசாத்.கஜகஸ்தானில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதால், லொக்கேஷன் பார்க்க முதன்மை தயாரிப்பாளர் அருண் பாண்டியனும், பிரபுதேவாவும் கஜகஸ்தான் சென்றுள்ளனர். இப்போதுள்ள ஒரே பிரச்சனை, பெயர், சிங்கம் என்ற பெயருக்கு ஹரி சொந்தம் கொண்டாடுவதால், நல்ல பெயராக தேடி வருகிறார்கள். சிங்கம் மாதிரி உறுமலாக பெயர் இருந்தால் நீங்களும் பிரபுதேவாவுக்கு உதவலாம்

kuruvi thiraivimarsanam



Friday, May 16, 2008

Sunday, May 11, 2008

Thursday, May 8, 2008

kuruvi trailor

ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது 'குருவி'.


பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் 'குருவி'!
வியாழக்கிழமை, 8 மே 2008 ( 16:49 IST )'குருவி'க்கு விமர்சனங்கள்தான் சாதகமாக இல்லை என்றாலும், அதிரடி ஒபனிங் மூலம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.'கில்லி' போல் இல்லை என்று விஜய் ரசிகர்கள் உள்பட பல தரப்பும் கூறி வந்தாலும், சென்ற வார இறுதியில் ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது 'குருவி'.இரண்டாம் இடத்திலுள்ள ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்', பதினெட்டே கால் லட்சங்களை ஈட்டியுள்ளார்.தனுஷின் 'யாரடி நீ மோகினி', வார இறுதியில் பதிமூன்று லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு, 'சிவாஜி'யின் (25 காட்சிகள்) சாதனையை முறியடித்த 'குருவி', கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.37 லட்சத்தை வசூல் செய்தது. இதன்மூலம், முதல் இருதின வசூலில் 'பில்லா'வை முந்தியது.

விமர்சனம் குருவி


குருவி -->
கொத்தடிமைகளை மீட்க பருந்தின் பலத்தோடு போராடும் ஒரு குருவியின் கதை இது.
காயலாங்கடை காரை வைத்தே ரேஸில் ஜெயிக்கும் அசகாய சூரன்தான் ஹீரோ என்றால் அவர் செய்யும் மற்ற சாகசங்கள் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்.
அப்பாவுக்கு மலேசிய பெரும்புள்ளி ஒருவர் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காக குருவியாக (உயர்ரக பொருட்களை நாடு விட்டு நாடு சேர்க்கும் வேலை) மலேசியா செல்கிறார் நாயகன் விஜய். போன இடத்தில்தான் புரிகிறது அந்த பெரும்புள்ளி (சுமன்) மலை விழுங்கி மகாதேவன் என்பது.
அப்புறமென்ன வில்லன் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்ட, வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறார். இடையில் வில்லனின் தங்கையான த்ரிஷாவிற்கு விஜய் மேல் காதல் ஏற்படும் காட்சிகளும் எந்த படத்திலும் காணாத (புதுமை). சுமன் வைத்திருக்கும் டைமண்டை 'சுட்டு'க்கொண்டு சென்னை வரும் விஜய்க்கு அப்பாவும் அவரை சேர்ந்த ஆட்களும் கொத்தடிமைகளாக ஆந்திராவில் இருக்கும் தகவல் வர, அடுத்த ஷாட்டுகளில் கதாநாயகனின் அதிரடி கடப்பாவையே கலங்கடிக்கிறது. நூற்றுக்கணக்கான அடியாட்களை ஸாரி தடியாட்களை தவிடுபொடியாக்கி சக்ஸஸ் சாகசம் புரிவதுடன் கொத்தடிமைகளுக்கும் நமக்கும் கிடைக்கிறது விடுதலை.
விஜய்யை சூப்பர்மேன் ரேஞ்சுக்கு உயர்த்தி காட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் கோயம்பேடு மலர் அங்காடியை படம் பார்ப்பவர்களின் காதுக்கு மாற்றியிருக்கும் தரணியின் உழைப்பிற்கு போடலாம் சலாம்!
மின்னல் வேகத்தில் பாயும் காரிலிரு்து கட்டாகும் பிரேக் கேபிளை பற்களால் இழுத்துபிடித்து பேலன்ஸ் செய்யும் விஜய்க்கு உயரமான கட்டிடத்திலிருந்து பறந்துவந்து மின்சார ரெயிலை பிடிப்பதும், கயிற்றில் தொங்கியபடி அந்தரத்திலிருந்து கீழே விழும் த்ரிஷாவை அழகாக காப்பாற்றுவதும் சிரமமான காரியமா என்ன?


பத்து விநாடிகளில் வில்லன் வைத்திருக்கும் டைமண்டை விஜய்யின் கைக்கு வரவைக்கும் வித்தையெல்லாம் ஹாலிவுட் காரர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
கடப்பாவிற்கு கதை நகர்ந்தவுடன் ஆந்திரா காரத்தை அள்ளித் தெளிக்க, நம் கண்களெல்லாம் எரிச்சலில் அழ ஆரம்பிக்கிறது. விஜய் அடித்த அடியில் சுயநினைவிழந்துபோகும் நிலைமை சுமனு்ககும் அவரது ஆட்களுக்கும். விஜய்போல பலம் பொருந்திய வீரர்கள் இந்திய ராணுவத்திற்கு தேவை.
இடுப்பு சுளுக்கு காட்சியில் ஆரம்பித்து 'மொழுமொழுன்னு யம்மா...' பாட்டுவரை நிறையவே பயன்பட்டிருக்கிறது த்ரிஷாவின் மத்தியபிரதேசம்.
சுமன் கோமா ஸ்டேஜிக்கு போனதும் அந்த இடத்தை யார் நிரப்புவது என யோசித்த இயக்குனர், ஆசிஷ் வித்யார்த்தியை கொஞ்சநேரம் சுத்தவிடுகிறார். கொண்டா ரெட்டி கதாபாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கு மற்ற படங்களை போலதான் இதிலும் ஒரே மாதிரியான ரியாக்ஷ்ன்.
என் மகன் எப்படியாவது எங்களை காப்பாத்த வருவாண்டா...என்று டயலாக் போசும் லட்சத்தில் ஒரு சினிமா தந்தையாக மணிவண்ணன்.
பல குரலில் பேசியே காலந்தள்ள பார்க்கும் விவேக்கின் திறமையும் பாராட்டுக்குரியது. எருமை மாடு மாதிரி இருந்து கொண்டு சிறுவனின் பிஞ்சு விரல் மசாஜ் சுகம் காணும் கடப்பா ராஜூ கேரக்டரெல்லாம் வக்கிரத்தின் உக்கிரம். பறக்கும் குருவி

Wednesday, May 7, 2008

விஜய்யின் புதிய படம் 'சிங்கம்'


விஜய்யின் கமர்ஷியல் பார்முலாதான் 'சிங்கம்' படத்தின் கதையாம். இந்தப் படம் முடிந்ததும் ஏவி.எம்.நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் விஜய் மீண்டும் உதயநிதிக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளராம்.ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த படத்திற்கு 'புலி' என பெயர் வைத்து பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மூவர் கூட்டணியின் மீண்டுமொரு வெற்றி "குருவி"
[ Sunday, 04 May 2008, 06:16.48 PM GMT +05:30 ][ எம்.எஸ்.என் ]
வெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (!?), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.
விஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.விஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.


காதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்‍ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது. கோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்‍ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.

'குருவி' news


குட்டி ரஜினியாகவே
கருதப்படுகிறார் விஜய். ரஜினி படங்கள் வெளிவரும் போது Vijayஎப்படி தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவே அஞ்சுவார்களோ, அப்படி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் நடித்த படங்கள் வருகிற நேரத்திலும். குருவி படம் மே 10-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆக்சனுக்கு விஜய், இளமைக்கு த்ரிஷா, விறுவிறுப்புக்கு தரணி என 'குருவி'க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ள நிலையில், மே 10ல் படம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.




vijay in 1st film nalayatheerppu

இளைய தளபதி" விஜய்

விஜய், (பிறப்பு - ஜூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைகத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.





நன்றி